Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நண்பர்களுக்குள் மோதல்… காயமடைந்தவர் உயிரிழப்பு; ஒருவர் விசாரணையில்

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரி பாலம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, நேற்று இரவு இரண்டு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். உயிரிழப்புக்கான காரணம், மோதலுக்கான பின்னணி மற்றும் சம்பவத்தின் முழு விவரங்கள் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற உடனடி மற்றும் நம்பகமான செய்திகளுக்கு தொடர்ந்து THE NEWS TAMIL-ஐ பின்தொடருங்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்