தஞ்சை மாணவி லாவண்யா வழக்கில் கைதான வார்டன்_சகாயமேரி ஜாமீனில் வெளிவந்த போது, சிறை வாசலில் மாலையணிவித்து வரவேற்ற திமுக_MLA_இனிகோஇருதயராஜ் அவர்களை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மற்றும் பிஜேபியினர் வலியுறுத்தி வந்துள்ளனர் இந்த நிலையில் இன்று சிபிஐ குழு தஞ்சையில் தங்களுடைய விசாரணையை தொடங்கியது இதில் திமுக எம்எல்ஏ இனிகோ ராஜா அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையாக தற்போது வெடித்துள்ளது இன்று சமூக வலைத்தளத்தில் இப்படி ஒரு செய்தியும் பரவி வருகிறது தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் நிபந்தணை ஜாமீனில் வெளிவந்த காப்பக நிர்வாகியை திருச்சி மத்திய சிறை வாசலில் சால்வை அணிவித்து வரவேற்ற திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உத்தரவு. நடப்பது என்ன என்று பொறுத்திருந்து பார்ப்போம் இதுவரை லாவண்யா மரணத்திற்காக போராடியதில் சுருக்கம் நடந்த நிகழ்வுகள்
மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு திரிபுரா மாநிலத்தில் ABVP தேசிய மாணவர் அமைப்பினர் போராட்டங்கள் செய்து மனு அளித்துள்ளனர்
இந்தியா முழுவதும் மக்கள் நீதி கேட்டு வருகின்றனர்
தஞ்சாவூர் மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தஞ்சாவூருக்கு குழுவை அனுப்பி இருந்தது
இதுகுறித்து என்சிபிசிஆர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டில் உள்ள சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளியின் மைனர் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்த புகாரை, குழந்தைகள் உரிமை ஆணையம் பெற்றுக்கொண்டது. இது குறித்து விசாரிக்க தலைவர் பிரியங்க் கனோங்கோ தலைமையிலான குழு தமிழகத்துக்கு வருகை தந்து விசாரணையை செய்தது
வீடியோவில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தில், சிறுமி தனது பள்ளி தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு அழுத்தம் கொடுப்பதாகவும், இந்து மதத்தை விட்டு வெளியேற மறுத்ததற்காக தன்னை சித்திரவதை செய்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இருப்பினும், காவல்துறையும் ஊடகங்களும் இந்த வழக்கில் மதமாற்றக் கோணத்தை மறைக்க முயல்கின்றன, மேலும் சில வழக்கமான வேலைகளைச் செய்ய பள்ளி கூறியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்ட முயற்சிக்கின்றனர்.
எனவே, வழக்கின் உண்மைகளை அறிய என்சிபிசிஆர் ஜனவரி 30 மற்றும் 31 க்கு இடையில் சம்பவ இடத்திற்கு வருகை தருகிறது. மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே விசாரணைக்கு ஆணையமே அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என்றும் என்சிபிசிஆர் தெரிவித்துள்ளது.
அதற்காக சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புலனாய்வு அதிகாரி அவர்களின் இருப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணின் பெற்றோரைச் சந்திப்பது, இறந்தவரின் வகுப்புத் தோழர்களுடன் உரையாடல், இறப்பதற்கு முன் சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் இறந்தவரின் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களிடம் விசாரணை, பள்ளி அதிகாரிகளைச் சந்தித்தல் மற்றும் உள்ளூர் மக்களுடன் பேச்சுவார்த்தை, என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆணையம் தயாராக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.