Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

காணாமல் போன திருமாவளவன் எங்கே போனார் கேள்வி எழுப்பும் குஷ்பூ……

0

மேடையில் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ, எல்லாவற்றிற்கும் குரல் கொடுக்கும் த திருமாவளவன்  எங்கே போனார். அவர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
மேலும் அண்ணாமலையின் துணிச்சல், தைரியம் தெரியவேண்டுமானல் கர்நாடக சென்று கேளுங்கள். அவரை சும்மாவா தமிழக தலைவராக மாற்றினோம். நியாத்திற்கு போராடுபவர்களே தைரியசாலிகள். பாஜகவிற்கு துணிச்சல் உள்ளது. உலகில் மிகசிறந்த தலைவர் மோடி என ஆய்வுகள் கூறுகிறது. உலகளவில் இந்தியா முன்னேறியுள்ளது என்றார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறிகையில், முதல்வர் இதுவரை இந்த மரணம் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை. அரியலூர் மாணவியின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். பெண் குழந்தையின் தாயாக கூறுகிறேன்; இழந்தவர்களுக்கு தான் வலி தெரியும் என்றார்.

தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று யாராவது கூறமுடியுமா என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று முதல்வர் அறிக்கை வெளியிடுவாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

இறந்த மாணவியின் புகைப்படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தியது சட்டத்திற்கு எதிரானது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சட்டத்திற்கு உட்பட்டு தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆர்ப்பாட்டம் நடத்தும் போது மாணவியின் புகைப்படத்தை பயன்படுத்தவில்லை. மலர் அஞ்சலிக்காக மட்டுமே மாணவியின் புகைப்படத்தை தனியாக பயன்படுத்தினோம் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்