Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருவரங்கத்தில் தேங்காய் வியாபாரியிடம் பணம் திருட்டு

0

திருவரங்கத்தில் தேங்காய் வியாபாரியிடம் பணம் திருட்டு,

வாலிபர் கைது.

திருச்சி மார்ச் 22:
திருவரங்கம் பஞ்சகரை ரோடு ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 38) இவர் அம்மா மண்டப பகுதியில் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு சென்ற ஒரு வாலிபர் கடையில் இருந்த ரூபாய் 6 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார். இது குறித்து கோவிந்தன் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்துக்கு கிடமாக திருவரங்கப் பகுதியில் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் பெயர் விஜய். திருவாரூர் மாவட்டம் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.அவரிடமிருந்து ரூபாய் 6 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்