Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திமுக கவுன்சிலரின் கணவருக்கு அடி- உதை

0

திருச்சி கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் தசரதன். (வயது 51). திமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் மெடிக்கல் நடத்தி வருகிறார். இவரது மனைவி தங்கலட்சுமி. இவர் திருச்சி மாநகராட்சி 15 வது வார்டு திமுக கவுன்சிலர் .நேற்று திமுக கவுன்சிலர் தங்கலட்சுமி அவரது கணவர் தசரதனுடன் அப்பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியினை பார்த்து ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் வேலன் (வயது 38) என்பவர் இவர்களிடம் தகராறில் ஈடுபட்டதுடன் தசரதனை மூக்கில் குத்தியுள்ளார் .இது குறித்து தசரதன் கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிந்து சஞ்சய் வேலனை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சஞ்சய் வேலன் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு வியாபாரங்கள் செய்து வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்