Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி நீதிமன்றத்தில்மயங்கி விழுந்த ஓய்வு பெற்ற அதிகாரி சாவு

0

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 63). ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரியான இவர் தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக அவரது மனைவி ஜீவனாம்சம் கேட்டு திருச்சி குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடந்தது.
இதில் நீதிபதி முன்பு ஆஜராக வந்த தியாகராஜன் நீதிமன்ற வாசலில் திடீரென மயங்கி விழுந்தார்.
பின்னர் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டது தெரிவித்தனர்.
மனைவியை பார்த்த அதிர்ச்சியில் அவர் இறந்து விட்டதாக தெரிகிறது.
ஜீவனாம்சம் கேட்ட நிலையில் கணவர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து இறந்ததைக் கண்ட அவரது மனைவி நீதிமன்றத்தில் இருந்து அதிர்ச்சியுடன் வெளியேறினார். இந்த சம்பவம் கோர்ட்டுவளாகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்