Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

பாஜக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் மீது வழக்கு

0

திருச்சி ஜூன் 7
திருச்சியை அடுத்த மணிகண்டத்தை அருகே உள்ள மட்டப்பாறைப்பட்டி வைகை நகரை சேர்ந்தவர் கிருஷ்ணராவ் (வயது40). இவரது மனைவி தேவிகா (வயது39). பாஜ 58வது வார்டு தலைவர். தேவிகாவின் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தை கிரையம் பெற்று குடியிருந்து வந்த தில்லைநகர் காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வரும் அன்பு மலர் மற்றும் அவரது கணவர் குழந்தைவேல் இருவரும் சேர்ந்து தனது வீட்டில் தேவிகா வீட்டு படுக்கறையை நோட்டமிடும்படி சிசிடிவி கேமரா பொருத்தி வந்ததாகவும், மேலும் தேவிகாவின் இடத்தை அபகரிக்கவும், காம்பவுண்ட் சுவரை இடித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தேவிகா மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் அன்பு மலர், அவரது கணவர் குழந்தைவேல் மீது மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்