Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

அதிமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு பறிமுதல் ஒருவர் கைது

0

திருச்சி, அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் அண்ணா நகர் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அதிமுக நிர்வாகியான இவர் இறந்துவிட்டார். இவரது மகன் முத்துக்குமார் ( 29). இவர்களுக்குச் சொந்தமான வீடுகளில் வெடிகுண்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜன், அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் திருச்சிமாநகர காவல்துறை தெற்கு துணை ஆணையர் ஸ்ரீதேவி, பொன்மலை உதவி ஆணையர் காமராஜ், வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் எட்வர்டு, சிறப்பு உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி, காவலர் ஜாகிர் உசேன், தடய அறிவியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர்
மேல அம்பிகாபுரம் வீடு மற்றும் குமரன் தெருவில் மெத்தக்கடை அருகில் உள்ள பண்ணை வீடு உள்ளிட்டவைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதûயில் ஒரு கிலோ எடை கொண்ட (ஆணி மற்றும் பால்ஸ் இரும்புத்துகள்கள் கொண்ட வெடிகுண்டு) மற்றும் பால்ரஸ் வெடிகுண்டுகள் உள்ளிட்டவைகளையும், அதனுடன் பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனைக்கு பின்னர் வெடிகுண்டுகள் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அரியமங்கலம் போலீஸôர் வழக்குப்பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கீழ அம்பிகாபுரம், காவிரி நகரைச் சேகரின் மற்றுமொரு மகன் சரவணன், குட்ட பாலு, கணேசன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர். அதிமுக நிர்வாகியின் வீட்டில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகரை சேர்ந்த சேகரின் அண்ணன் பெரியசாமியின் மனைவி பார்வதி கொடுத்த புகாரின் பேரில் முத்துக்குமார் ,சரவணன் ஆகிய இருவர் மீதும் மேலும் சில பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுளஅளது.
பெட்டிச்செய்தி :
ரௌடிகளான பெரியசாமி, சேகர் இருவருமே தங்களது பாதுகாப்புக்காக ஆளுக்கொரு அரசியல் கட்சியில் அடைக்கலமாகி பின்னர் பிரபலமானார்கள். இரு தரப்பினருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பங்காளி பகை ஏற்பட்டது. இதில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சேகர் கொல்லப்பட்டார். பின்னர் பழிக்குப்பழியாக பெரியசாமியும் கொல்லப்பட்டார். இரு குடும்பத்தினரிடையே தொடர் பகை இருந்து வருகிறது. இந்நிலையில் சேகரின் மகன்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வீட்டில் நாட்டு வெடிகுண்டும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்