Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி ரயில் நிலையத்தில் இளைஞரிடம் ரூ. 1.44 லட்சம் பறிமுதல்

0

திருச்சி, மார்ச்.27 :
திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீசார் மேற்கொண்ட  சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டு கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது,அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த
நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.
இதைத்தொடர்ந்து யில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்