Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் பரபரப்பு தொழிலதிபர் வீட்டில் 107 பவுன் நகை திருட்டு

0

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 64) இவர் தனது வீட்டின் அறையில் இரும்பு பெட்டகத்தில் 107 பவுன் நகையை வைத்து பூட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த இரும்பு பெட்டகத்தை திறந்து பார்த்த பொழுது மேகநாதன் அதிர்ச்சியடைந்தார். அந்த இரும்பு பெட்டகத்தில் இருந்த 107 பவுன் நகை திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார்.கட்டகம் உடைக்கப்படாமல் இருப்பது வீட்டில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து மேகநாதன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 107 பவுன் நகை திருட்டுப் போனது எப்படி? யார் திருடியது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார் இதேபோன்று திருச்சி பாலக்கரை அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55)இவர்உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டார். இந் நிலையில் வீட்டின் அருகில் வெளி பகுதியில் வீட்டு தெய்வதற்கு சிறிய அளவில் மேடை அமைத்து இருந்த பூஜை அறையில் இருந்த பூஜை பொருட்கள் திருட்டுப் போய் இருப்பத்தை கண்டு ரவிசந்திரன்அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ரவிச்சந்திரன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூஜை பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்