Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி பாலக்கரையில் தூக்கு மாட்டி வாலிபர் சாவு

0

பாலக்கரையில் தூக்கு மாட்டி வாலிபர் சாவு

போலீசார் விசாரணை.

திருச்சி மார்ச் 6: திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகன் சகாயராஜ் (வயது 39) இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் அக்கா வீட்டில் இருந்து வந்தார். மேலும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சகாயராஜ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து
பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவீட்டில் பிணமாக தொங்கிய சகாயராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்