Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் வட மாநில வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை.

0

திருச்சியில் வட மாநில வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை.

மனைவி பேசாததால் விபரீதம்.

திருச்சி மார்ச் 8- உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் முகமது ஹசன் (வயது 30) இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் ஜான்தோப்பு பகுதியில் உள்ள ஒரு மேன்சனில் தங்கி தையல் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மனைவியிடம் செல்போனில் பேசியுள்ளார். இதையடுத்து அவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி இரண்டு நாட்களாக பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அறையில் இருந்த முகமது ஹசன் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோட்டை போலீசார் விரைந்து சென்று முகமது ஹசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்