Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் கல்லூரி மாணவி உள்பட இரண்டு பேர் மாயம்

0

வெவ்வேறு சம்பவங்களில், திருச்சியில் கல்லூரி மாணவி உள்பட இரண்டு பேர் மாயம், போலீசார் விசாரணை 

திருச்சி மார்ச் 8:திருச்சி பாலக்கரை கீழப்புதூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர், சுப்பிரமணி இவரது மகள் சுபாஷினி (வயது 19) இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது அக்கா தங்கமீனாட்சி பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். இதே போன்று திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியை சேர்ந்தவர், கண்ணன் இவரது மகள் ஷாலினி (வயது 21) இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று  வேலைக்கு சென்றவர் மீண்டும்  வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது தாய் இந்திரா கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.  புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஷாலினியை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்