Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி சிட்டி நியூஸ்

0

ஓடும் பஸ்சில்
பெண்ணிடம் நகை திருட்டு

திருச்சி ஜன29- திருச்சி வயலூர் மெயின் ரோடு அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் வேலு.இவரது மனைவி தனலட்சுமி இருவரும் வெளியே சென்று விட்டு மத்திய பேருந்து நிலையத்தில் பஸ்சில் ஏறி வந்து இறங்கி விட்டிற்கு சென்று விட்டார். பிறகு வீட்டில் பார்த்த பொழுது தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் நகை திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சடைந்தார். இது குறித்து அவரது கணவர் வேலு அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகையை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்

 

 

திருச்சியில் சுங்கத்துறை ஊழியர் உள்பட 4 பேர் சாவு

திருச்சி கிராப்பட்டி அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் பெலிக்ஸ ராஜ் (வயது 63) இவர் ஓய்வு பெற்ற சுங்கத்துறை ஊழியர். சம்பவத்தன்று இவர் கிராப்பட்டி அருணாசலம் நகர் வீட்டில் அருகில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்று கொண்டிருந்தார். பொழுது திடீரென்று மயங்கி அதில் விழுந்து உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் தண்ணீர் தொட்டியில் விழுந்தது யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் அந்த வழியாக சென்ற நபர்கள் சிலர் அவரை பார்த்து மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பெலிக்ஸ் ராஜாவை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் பெலிக்ஸ் ராஜ் நீரில் மூழ்கி ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சின்ன கடைவீதி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மகன் ராமநாதன் (வயது 48) இவர் பெங்களூரில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவருடைய மனைவிக்கு சிறுநீரக பிரச்சனை காரணமாக திருச்சிக்கு வந்து அவருக்கு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையில் ராமநாதன்க்கு சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோய் இருந்து வந்ததால் சம்பவத்தன்று ராமநாதன் வீட்டில் மயங்கி இறந்துவிட்டார். இது குறித்து அவரது தந்தை வெங்கட்ராமன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று திருச்சி உறையூர் பாண்டமங்கலம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் முபாரக் அலி (வயது 43) இவர் ஆட்டோ டிரைவர். முபாரக் அலிக்க்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மது பழக்கம் முகமது அலிக்கு இருந்ததால் மனைவி கோபித்துக் கொண்டு சங்கரன் கோவில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த முபாரக் அலி சம்பவத்தன்று தனது ஆட்டோவில் வாந்தி எடுத்து மயங்கி ஆபத்தான நிலையில் முகமது அலி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் முகமது அலி இறந்து விட்டதாக கூறினார் இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி வயலூர் ரோடு மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ண்ன். இவரது மகன் கோகுலநாதன் (வயது 22) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் நேற்று அலுவகத்தில் வேலை செய்ய்ஸ்ரீ மத்திய பேருந்து நிலையத்தில் பஸ்ஸில் வந்து இறங்கி வரும் பொழுது திடீரென்று அங்கு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு கோகுல்நாதன்னை பரிசோதனை செய்து டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார்

திருவரங்கத்தில் கல்லூரி மாணவன் மாயம் தந்தை போலீசில் புகார்

திருச்சி திருவானைக்காவல் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் அப்துல் கரீம் (வயது 20) இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி. காம்.மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது தந்தை முபாரக் அலி திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்துல் கரீம்மை தேடி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்