Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி சிட்டி முக்கிய செய்திகள்

0

திருச்சியில் 3 பெண்கள் உள்பட நான்கு பேர் மாயம்.

திருச்சி ஜன 22- திருவரங்கம் சோதனை சாவடி ஜெ. ஜெ.நகரை சேர்ந்தவர் அழகிரி. இவரது மகள் யோகேஸ்வரி (வயது 19) இவர் திருச்சி அருகே உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் நித்திய கல்யாணி திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதேபோன்றுநாகை மாவட்டத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் இவரது மகள் அக்சிகா ( வயது 21) இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு வீட்டில் திருமண செய்ய ஏற்பாடு செய்து வந்த நிலையில் நேற்று தனது தந்தை வைத்திலிங்கத்துடன் தேர்வு எழுதுவர்க்கு ஹால் டிக்கெட் வாங்க கல்லூரிக்கு வந்துள்ளார். கல்லூரி வளாகத்தில் வைத்திலிங்கத்தை நிற்க சொல்லிவிட்டு உள்ளே சென்ற அக்சா நீண்ட நேரம் ஆகியும் மீண்டும் திரும்ப வரவில்லை. இது குறித்து அவரது தந்தை வைத்திலிங்கம் கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். திருச்சி இபி ரோடு பூலோகநாத சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி ஸ்ரீபிரியா (வயது 34) இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற ஸ்ரீபிரியா மீண்டும் வீடு திரும்பவில்லை.இது குறித்து குமரேசன் கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். திருச்சி தென்னூர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் திருப்பதி (வயது 60) சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற திருப்பதி ப மீண்டும் திரும்பி வரவில்லை. இது குறித்து அவரது மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

என்ஜினியர் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

திருச்சி கருமண்டபம் ஜெயா நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் சீனிவாச குமார் (வயது 46) இவர் சிவில் என்ஜினியர்.குமார் தனது வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் தாயை தனியாக தங்க வைத்து உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று குமாரின் தாய் வீட்டை பூட்டிவிட்டு நாச்சிகுறிச்சியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் சம்பதவன்று வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து வீட்டுக்குள் இருந்த அறையில் புகுந்த பிரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து ஒடி விட்டனர். இது குறித்து சீனிவாச குமார் செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து என்ஜினியர் வீட்டில் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

 

வாலிபரிடம் வழிப்பறி

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிக்கினர்

திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பார் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 24) சம்பவத்தன்று இவர் திடீர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் இந்த இரண்டு மர்ம ஆசாமிகள் ராஜ்குமாரை தாக்கி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு ஓட முயன்றனர். அப்பொழுது அங்கு இருந்த பொதுமக்கள் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகள் இரண்டு பேரையும் விரட்டி சென்று பிடித்தனர். அப்பொழுது மர்ம ஆசாமிகள் 2 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர். பிறகு இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்