திருச்சி ஜூன் 13- புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் குமரப்பன்வயல் பகுதியை சேர்ந்தவர் நாதன் (வயது 70) இவர் கடந்த 30.10.2023ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடந்த போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2ந் தேதி அவருக்கு சிறையில் திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கைதி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 12 ந்தேதி மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து திருச்சி மத்திய சிறை (பொறுப்பு) சிறை அதிகாரி மணிகண்டன் திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.