Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ட்ராவல்ஸ் அதிபருக்கு அரிவாள் வெட்டு

0

புனே நாட்டிற்கு செல்ல பணம் வாங்கி,அனுப்பாததால்திருச்சியில் டிராவல்ஸ் அதிபர் மீது தாக்குதல்.போலீசார் விசாரணை

திருச்சி மார்ச் 5 திருச்சி காஜா மலை ஜேகே நகர் சமது தெருவை சேர்ந்தவர் சலீம் பாஷா (வயது 43) இவர் திருச்சி கே கே நகர் பஸ் நிறுத்தம் அருகில் தனியார் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரிடம் பூமி கண்ணன் என்பவர் அறிமுகமாகி புனே நாட்டிற்கு செல்ல ரூபாய் ஒரு லட்சத்து 95 ஆயிரம் பணம் பேசி அவருடைய ஜி பி செல்போன் நம்பருக்கு பணம் அனுப்பி உள்ளார். சிறிது நாட்கள் ஆன பிறகு சலீம் பாஷாவிடம் இருந்து எந்தவித பதிலும் வராத காரணத்தால் பூமி கண்ணன் அவரை சந்தித்து கேட்ட பொழுது புனே நாட்டில் உள்ள முகவர் இறந்து விட்டதால் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. உங்கள் பணத்தை திருப்பி தருகிறேன் என்று கூறியுள்ளார். பிறகு ஒரு லட்சத்து 65 ஆயிரம் பணத்தை சலீம் பாஷா பூமி கண்ணனின் ஜி பே கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டார், மீதம் உள்ள பணத்தை தராமல் இழுத்து அடித்ததாக தெரிகிறது.இதனால் கோபமடைந்த பூமி கண்ணன் சம்பவத்தன்று சலீம் பாஷா அலுவலகத்திற்கு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் வைத்துள்ளார்.இந்த சம்பவத்தில் காயமடைந்த சலீம் பாஷா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சலீம் பாஷா ,கே கே நகர் போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் பூமி கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்