Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

தமிழக முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த திருச்சி வாலிபர் ஜபருல்லாவை கைது

0

திருச்சி ஆழ்வார் தோப்பு இதயாத் நகரை சேர்ந்தவர் முகமது மைதீன். இவரது மகன் ஜபருல்லா (வயது 39) இவர் அந்தப் பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்கிக் கொண்டு அதில் இலவச வேட்டி, சேலை இல்லாததால் ஆத்திரமடைந்து உடனடியாக தன் செல்போனில் 100 நம்பருக்கு போன் செய்தார். போனில் பேசிய அவர் சென்ற ஆட்சியில் இலவச வேட்டி, சேலை கொடுத்தார்களே ஏன் இந்த ஆண்டு தரவில்லை என்று கூறி தமிழக முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்து போனை துண்டித்து விட்டார். இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜபருல்லாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்