Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருவரங்கத்தை தொடர்ந்து,திருவானைக்காவலிலும் அடிமனை பிரச்சனை விஸ்வரூபம்

0

திருவரங்கத்தை தொடர்ந்து,திருவானைக்காவலிலும் அடிமனை பிரச்சனை விஸ்வரூபம்

மாவட்ட கலெக்டர்யிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு.

திருச்சி மார்ச் 4 –

திருச்சி மாநகரில் உள்ள திருவானைக்காவலில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு மனைகளின் பத்திரப்பதிவை நிறுத்தி வைத்து, திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவில் உதவி ஆணையர், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார்.
இதையடுத்து இன்று, அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். இதையடுத்து இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் திருச்சி கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவானைக்காவலில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு மனைகள் உள்ளன. இந்நிலையில் பத்திரப்பதிவை நிறுத்தி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வழங்கிய பரிந்துரை கடிதத்தை ரத்து செய்ய வேண்டும. இப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது அவசர, அவசிய தேவைகளுக்கு தங்களது சொத்துக்களை விற்பதற்கு உரிய ஆவணம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
இந்த மனுவை பரிசீலித்த கலெக்டர் பிரதீப் குமார், திருவரங்கம் ஆர்டிஓ தலைமையில், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர், அகிலாண்டேஸ்வரி கோயில் உதவி ஆணையர், அடிமனை குழுவினரிடம் விரைவில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி, உரிய தீர்வு காணப்படும்’ என்று கலெக்டர் பிரதீப் குமார் உறுதியளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்