Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பல் சிக்கியது ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

0

திருச்சி மார்ச் 6- திருச்சி பாலக்கரை இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவருடைய ரோந்து வாகனம் பெல்சி கிரவுண்ட் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் வந்து கொண்டிருந்த போது தூரத்தில் ஒரு ஆட்டோ நின்றுகொண்டு இருந்தது. இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் பெரியசாமிக்கு சந்தேகம் வந்தது இதையடுத்து. அந்த ஆட்டோ அருகில் சென்று போலீஸ் வேன்னை நிறுத்தி ஆட்டோ அருகில் சென்று பார்க்க முயன்ற போது அங்குமறைந்திருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து திடீரென்று தப்பி ஓடினார்கள்.இதை எடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் அவர்களை பிடிக்க மைந்தனர் அவர்களின் இரண்டு பேர் மற்றும் பிடிபட்டனர் மீது நான்கு பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பிறகு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது ஒருவருக்கொருவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களைபிடித்து விசாரணை நடத்திய போது திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 27) அதே பகுதியை சேர்ந்த அஜித் (வயது 23)என்பது தெரிய வந்தது மேலும் இவர்களுடன்விஜய் பாபு அகஸ்டின் மகேந்திரன் தேவா உள்ளிட்டோர் ஒன்று கூடி கொள்ளையடிக்கும் நோக்கில் திட்டம் தீட்டிக்கொண்டு இருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஜய், அஜித் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து அரிவாள்,கத்தி, மிளகாய் பொடி பாக்கெட், கயிறு போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய நான்கு பேரை போலீசார் வலைவிசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்