Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

புரோட்டா மாஸ்டர் தீயில் கருகி சாவு

0

திருச்சி பிப் 12– திருச்சி அரியமங்கலம் காவேரி நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 42) இவருக்கு பானு என்ற மனைவி உள்ளார்.

திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக  பணிபுரியும் ஷாஜகான் குடிப்பழக்கம் உள்ளவர். அடிக்கடி

குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.கடந்த 10 ந்தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஷாஜகான் அறையில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார். அப்பொழுது அவருக்கு அருகில் கொசுவர்த்தி கொளுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொசுவர்த்தி சூருளில் இருந்து வந்த தீ திடீர் என்று படுக்கையின் மீது பட்டு தீ பரவி தூங்கிக் கொண்டிருந்த ஷாஜகான் உடல் மீது பரவியதில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த  சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்