திருச்சி ஜூன் 14-
திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் சகாய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 48) இதேபோன்று பொன்மலை பகுதி சகாய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 49 )இருவரும் துப்புரவு தொழிலாளிகள். சம்பவத்தன்று
ராஜா புவனேஸ்வரி வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த புவனேஸ்வரி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்துள்ளனர்.