Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் தாய், மகள் தூக்க மாத்திரையை தின்று தற்கொலை முயற்சி

0

திருச்சி வரகனேரி ஆனந்தபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜாபர் அலி. இவரது மனைவி ஷர்புனிஷா இவர்களுக்கு 15 வயதில் ஒருமகள் உள்ளார். இந்த நிலையில் ஷர் புனிஷா குடும்பத்தை நடத்த முடியாமல் திணறி வந்தார். இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம்
ஷர்புனிஷா பணம் கடன் வாங்கி உள்ளார்.இதனால் கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டிற்கு சென்று பணம் கேட்டு தகராறு ஈடுபடுவது வழக்கமாக இருந்தது. சம்பவத்தன்று கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்க வீட்டுக்கு வந்த போது அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் ஷர்புனிஷா வரும் வரை நின்று கொண்டு இருந்தனர். பிறகு நீண்ட நேரத்திற்கு பிறகு ஷர் புனிஷா விட்டிற்கு வந்த போது கடன் கொடுத்தவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் மனம் உடைந்த காணப்பட்ட ஷப்புனிஷா வீட்டுக்குள் சென்று தனது 15 வயது மகளுடன் அதிக அளவு தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்