Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் தொழிலதிபரிடம் ரூபாய் 6 கோடியே 10 லட்சம் மோசடி

0

திருச்சி ஜன8- திருச்சி காட்டூர் எஸ்.எ.எஸ்.நகரை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 43) தொழில் அதிபரான இவர்இந்தப் பகுதியில் ஒட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் திருச்சி புத்தூர் பாரதி நகர் சேர்ந்த முருகானந்தம் மற்றும் கேகே நகர் பகுதியை சேர்ந்த முகமது நிசாருதீன் ஆகியோர் அறிமுகமானவர்கள். இவர்கள் இரண்டு பேரும் முகமது ரபிக்கிடம் இதுபோன்று குற்றாலத்தில் நட்சத்திர ஒட்டல் கட்ட உள்ளதாக அவரிடம் கூறியுள்ளனர். மேலும் அந்த நட்சத்திர ஓட்டல் கட்ட பணம் தேவைப்படுவதாகவும் அந்த பணத்தை கொடுத்தால் அதோடு சேர்ந்து லாப பணத்தையும் தருவதாக முகமது ரபிக்யிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக தெரிகிறது. இதையடுத்து முகமது ரபிக் தன்னிடம் இருந்த ரூபாய் ஆறு கோடியே 10 லட்சம் பணத்தை பல கட்டங்களில் முருகானந்தம், முகமது நிசாருதீன்யிடம் கொடுத்துள்ளார். சிறிது காலம் சென்ற பிறகுபணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்தனர்.இதையடுத்து ஒட்டல் கட்ட கொடுத்த பணத்தை முகமது ரபிக் திருப்பி கேட்டுள்ளார். அதற்கு முருகானந்தம், முகமது நிசாருதீன் ஆகிய இருவரும் தருவதாக கூறி தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தனர். இதனால் சந்தேகமடைந்த முகமது ரபீக் பணத்தை கொடுத்து ஆக வேண்டும் என்று கண்டிப்பாக பேசியதாக தெரிகிறது.
இதையடுத்து முருகானந்தம் முகமது நிசாருதீன் உள்ளிட்டோர் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து முகமது ரபிக் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் முருகானந்தம், முகமது நிசாருதீன் மற்றும் 11 பேர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்