Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மின் இணைப்பை மாற்ற லஞ்சம்

0

திருச்சியில் வீட்டு மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்றுவதற்கு ரூ. 12,000 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
திருச்சி கே கே நகரை சேர்ந்தவர் பெரியநாயகம் மகன் சந்தோஷ். இவருக்கு இவரது அப்பா பெயரில் உறையூர் சவேரியார் கோவில் தெருவில் சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டில், மருத்துவமனை நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். இதனையடுத்து வீட்டின் மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்றுவதற்காக தென்னூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு உறையூர் பகுதிக்குரிய கணக்கீட்டாளர் ஜெயச்சந்திரன் என்பவர், வீட்டை வணிகப் பயன்பாட்டுக்காக (கமர்சியலுக்கு) வாடகைக்கு விட்டுள்ளீர்கள். நான் ரிப்போர்ட் எழுதினால் ரூ. 80,000 க்கும் மேல் அபராதம் விதிக்க நேரிடும். எனவே ரூ.15 ஆயிரம் தனக்கு லஞ்சமாக கொடுத்தால், அபராதமின்றி மின் இணைப்பை மாற்றிக்கொடுக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
ஆனால், சந்தோஷ் தான் ஏற்கனவே இது தொடர்பாக (டேரிஃப் சேஞ்ச் செய்வதற்கு) மனு அளித்துள்ளதாகவும், அந்த மனுவின் அடிப்படையில் மாற்றி கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனாலும் ஜெயச்சந்திரன் ஏற்கவில்லை. இதனையடுத்து தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது குறைத்தால் தருகிறேன் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து ரூ.12,000 மாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்தோஷ் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனையின் பேரில், சந்தோஷ், ஜெயச்சந்திரனுக்கு ரூ.12,000 ரொக்கத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார்.அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்னவெங்கடேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஜெயச்சந்திரனை ரொக்கத்துடன் கைது செய்தனர். தொடர்ந்து மின்வாரிய ஊழியரின் அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் போலீஸôர் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்