Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திமுக ஆட்சியில் நாமம்… போஸ்டரால் பரபரப்பு. போலீசில் திமுக புகார்

0

திமுக ஆட்சியில் நாமம்… போஸ்டரால் பரபரப்பு. போலீசில் திமுக புகார்

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட துவரங்குறிச்சி மற்றும் மருங்காபுரி வட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில் கடந்த ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள தமிழக அரசை விமர்சித்து விடியா திமுக ஆட்சியில் நாமம் போடப்படுகிறது என பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த போஸ்டர்கள் திருச்சி புறநகர் பகுதிகள் மட்டுமின்றி மாநகரிலும் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர் திருவரங்கம் போலீஸ் உதவி கமிஷனரிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார் அந்த புகாரில் தமிழக அரசையும் ,மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இச் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்