Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

அனைவரையும் உள்ளடக்கும் மகத்தான சட்டம் பற்றிய ஒரு பார்வை

0

சிஏஏவுக்கான விதிகள்’ லோக்சபா தேர்தலுக்கு முன், அமல்படுத்தப்பட்டதால், குடியுரிமை (திருத்த) சட்டம் (CAA) மீண்டும் நாடு முழுவதும் பரபரப்பான விவாதங்களை தூண்டியுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரான – இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு விரைவான இந்திய குடியுரிமை வழங்க வடிவமைக்கப்பட்ட இந்த சட்டம், சில ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக முஸ்லிம்களிடையே கடும் மனகுழப்பத்தை உண்டாக்கியது.

இங்கு, CAA அடிப்படையில் முஸ்லீம்களுக்கு எதிரானது என்ற தவறான எண்ணத்தை அகற்றுவது மிகவும் முக்கியமானது. இந்தச் சட்டம் குறிப்பாக தங்கள் சொந்த நாடுகளில் கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மை மதத்தினருக்கு புகலிடம் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா, இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடு என்பதால், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, இந்திய குடியுரிமையை வழங்கி, இந்த பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது. இந்திய அரசாங்கம் என்ன கூறுகிறது என்றால் , அண்டை நாடுகளில் மத சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் துன்புறுத்தலுக்கான பதில் தான் CAA என்று அரசாங்கம் வாதிடுகிறது. இச்சட்டத்தின் மூலம் முஸ்லிம்களை விலக்கி வைப்பது இந்திய சமூகத்தின் கட்டமைப்பிலிருந்து அவர்களை ஒதுக்கி வைக்கும் முயற்சி அல்ல. மாறாக, அண்டை நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர், இதனால் மத சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் அதே அளவிலான துன்புறுத்தல்களை எதிர்கொள்ளவில்லை. மேலும், முஸ்லிம்கள் குடியுரிமை பெற மாற்று வழிகள் உண்டு , இயற்கைமயமாக்கல் விதியின் கீழ், பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்தால் எந்தவொரு நபருக்கும் கிடைக்கும்.
இந்தியாவில் CAA விதிகளை அமல்படுத்தியபின், நாடு நகர்ந்து செல்லும் நிலையில், இந்த சட்டத்தை மனிதாபிமான அடிப்படையில் நிலைநிறுத்துவது முக்கியம். துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரின் அவலத்தை நிவர்த்தி செய்ய உதவும் இந்தச் சட்டம் நாட்டில் நிலவும் மதநல்லிணக்கத்தை காத்து நாட்டில் வாழும் அனைவரும் சமம் என்ற உணர்வை கொள்ள வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்