Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் எலி மருந்து தின்று பெண் சாவு 

0

திருச்சியில் பரிதாபம்.

எலி மருந்து தின்று பெண் சாவு.

திருச்சி மார்ச் 8:திருச்சி புத்தூர் கள்ளாங்காடு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 35) இவருக்கு நீண்ட காலமாக வயிற்று வலி இருந்து வருகிறது.இந்நிலையில் வயிற்று வலி தாங்க முடியாமல் சம்பவத்தன்று எலி மருந்து தின்று தற்கொலை முயற்சி செய்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் புவனேஸ்வரி, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்