Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

அனாதையாக கிடந்த ஆண் உடல்

0

 

திருச்சி மார்ச் 6: திருச்சி கோட்டை ரெயில் நிலையம் குடியிருப்பு பகுதியில் உள்ள வராண்டாவில், சுமார் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவர் இறந்து கிடக்கிறார் என்று கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபொழுது அங்கு ஆண் ஒருவர் பிணமாக இருந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது இறந்த நபர் பெயர் பாலாஜி (வயது 44) திருவள்ளூர் மாவட்டம் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இந்த பகுதியில் சுற்றி கொண்டு இருந்தார் என்று தெரிய வந்தது. இது குறித்து கோட்டை போலீசில் திருச்சி டவுன் கிராம நிர்வாக அலுவலர் கிரேசி மேரி புகார் கொடுத்தார் புகாரின் பேரில் கோட்டை போலீசார்வழக்குப்பதிவு
செய்து பாலாஜி இறந்தது எப்படி ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்