Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

விவசாய சங்க நிர்வாகி வெட்டிக்கொலை

0

 

மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள எம் ஆர் பாளையம் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் கந்தன் மகன் சண்முகசுந்தரம் (வயது 65) இவர் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்துவிட்டார். இந்த நிலையில் 2ம் தாரமாக ஒரு பெண்னை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சண்முகம் 2வது மனைவி வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் மனைவி சண்முகத்துடன் கோபித்துக் கொண்டு கடந்த 15 நாளுக்கு முன்பு தனது தாய் வீட்டில் சென்று விட்டார். இந்த நிலையில் சண்முகம் மட்டும் எம் ஆர் பாளையம் கிழக்கு காலனியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.இவருக்கு தினமும் அவருடைய அக்கா மூன்று வேலை உணவை கொண்டு வந்து கொடுப்பது வழக்கம்.இந்த நிலையில் நேற்று இரவு சண்முகத்தை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இதையடுத்து இன்று காலை அவருடைய அக்கா வழக்கம் போல உணவு எடுத்துக் கொண்டு வந்து பார்த்தபோதுதம்பி சண்முகம் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியை அடைந்து அலறி துடித்தார்.இந்த கொலை சம்பவம் குறித்து சிறுகனூர் போலீஸா இருக்கு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட சோதனை நடத்தினர் இதற்கிடையில் படுகொலை செய்யப்பட்ட சண்முகத்தின் உடலை கைப்பற்றி போலீசார் வேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகம் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன கொலை செய்த மர்ம கும்ப கும்பல் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுகனூர் பகுதியில் விவசாய சங்க நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்