Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி சிட்டி நியூஸ்

0

திருச்சியில் மகளைக் காணவில்லை என்று
தந்தை போலீசில் புகார்

-திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் பாரதி தெருவை சேர்ந்தவர் நவராஜ்.இவரது மகன் பொன்மதி (வயது 23) இவர் B E கட்டிடக்கலை படித்து வருகிறார் சம்பதவன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற பொன்மதி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை நவராஜ் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து பொன்மதியைத் தேடி வருகின்றனர்.

உறையூரில் கூலி தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

– திருச்சி உறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் வெங்கடேஷ் (வயது 30)கூலி தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு ஈடுபடுவது வழக்கம். சம்பவதன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையின் விட்டத்தில் சேலையில் வெங்கடேஷ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் பரிதாபம் தீயில் கருகி இளம் பெண் சாவு .

திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்பிஓ காலனி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகள் அபிநயா (வயது 18) சம்பவத்தன்று வீட்டில் அபிநயா விளக்கை பற்ற வைக்க முயற்சி செய்த போது எதிர்பாராவிதமாக அவர் அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்தது.சிறிது நேரத்தில் தீ அபிநயா உடல் முழுவதும் பரவியது. இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த அபிநயா பலத்த காயத்துடன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி பீமநகரில் நள்ளிரவு சம்பவம்
செடல் மாரியம்மன் கோவில் அருகே மர்ம கொடி கம்பம்

திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகில் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் பல கட்சிகளில் கொடி கம்பங்கள் உள்ளது. இந்தநிலையில் அந்த இடத்தில் நேற்றிரவு புதிதாக வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்ட ஒரு இரும்பு கொடி கம்பம் வைக்கப்பட்டு உள்ளது.இதனைப் பார்த்து இன்று காலை அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில் மர்ம கொடி கம்பம் குறித்து பா.ஜ.க.வினர்க்கு தகவல் தெரிந்து சம்பா இடத்துக்கு விரைந்து சென்று அந்த கொடி கம்பத்தை பார்த்து அதனை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.மேலும் அந்தப் பகுதியை சேர்ந்த அனைத்து கட்சியினர் கொடிக்கம்பம் வைக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.
தகலறிந்து இந்த கொடி கம்பம் யாருடையது? எந்த கட்சி மற்றும் எந்த அமைப்பை சேர்ந்தது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் அங்கு அனுமதி யின்றி வைக்கப்பட்ட கொடி கம்பத்தை அகற்றுமாறு திருச்சி மாநகராட்சிக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்