Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி திருவானைக்காவலில் தாய், மகனை கொன்று தற்கொலை சம்பவம்…

0

டிச. 9-
எனது மனைவியை இஷ்டப்படி வாழ விடுங்கள் கார் டிரைவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது

திருச்சி திருவானைக்காவல் அகிலா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்( வயது 34) இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு சாமிநாதன் (வயது8) என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேயன் துபாய் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். இதையடுத்து அவரது தாய் வசந்தா, மனைவி, மகன் ஆகியோர் அகிலா நகரில் உள்ள ஒரு மாடி வீட்டில் வசித்து வந்தனர்.

தாய், மகனுடன் டிரைவர் தற்கொலை
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டை உள் பக்கமாக பூட்டிவிட்டு தாய் வசந்தா, மகன் சாமிநாதன் ஆகியோரை கொன்றுவிட்டு கார்த்திகேயன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உருக்கமான கடிதம் சிக்கியது

பின்னர் வீட்டு அறையில் போலீசார் சோதனை நடத்திய போது கடிதம் ஒன்று சிக்கியது.
அதில்,
என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. தாய், மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களை தன்னுடன் அழைத்துச் செல்வதாக கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்போது கடிதத்தின் முழு விவரம் வெளியாகி உள்ளது.
அதில் மனைவி நன்றாக படித்து இருக்கிறாள். நல்ல வேலை பார்க்கிறாள். மனைவியை அவளது இஷ்டத்துக்கு வாழ விடுங்கள்.
எனக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது. எனவே சாக முடிவு செய்துவிட்டேன். இந்த நிலையில் தாயும் மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களையும் தன்னுடன் அழைத்து செல்கிறேன்.என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் போலீசார் விசாரணை நடத்திய போது இறந்து போன
கடிதத்தின் சாராம்சத்தை பார்க்கும்போது கணவன் -மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருக்கலாம். இதில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திகேயன் தாயையும், மகனையும் கொன்று விட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.மேலும் கார்த்திகேயன் வீட்டில் கேமரா வைத்து வெளிநாட்டில் இருந்து கொண்டு இங்கு நடப்பதை பார்த்துக்கொண்டு இருந்து உள்ளார் இதனால் அவருக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர் மேலும் இறந்த தாய் பீரோவில் தூக்கு மாட்டி தொங்கவிடப்பட்டு உள்ளார் இதேபோன்று மகன் காதவில் தூக்கு மாட்டி தொங்கவிடப்பட்டு உள்ளார்.மேற்கண்ட இரண்டு பேர் இறந்து இருப்பதை பார்க்கும் பொழுது கார்த்திகேயன் இருவரையும் கொலை செய்து பீரோ மற்றும் கதவில் மாட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.இருந்த போதிலும் 3 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் இவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து முழு விவரம் தெரியும்.இந்த சம்பவம் திருவானைக்காவல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்