Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

12 வயது சிறுமி பலாத்காரம் தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

0

12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை திருச்சி மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு.
திருச்சி மார்ச் 18:திருச்சி சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் ராஜா தெருவை சேர்ந்தவர் ஜான் மேக்சின்(வயது 40) இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். 2018 மே 1ம் தேதி முதல் சில மாதங்கள் அதே பகுதியில் உள்ள ஒரு சிறுமிக்கு பாலியல் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். இது குறித்து அவரது பெற்றோர் திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து கடந்த              8 – 9-2020ம் ஆண்டு அன்று ஜான்மேக்சினை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி ஸ்ரீவத்சன் குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனையும் அளித்து தீர்ப்பளித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க கலெக்டருக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக ஜாகிர் உசேன் வாதாடினார்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்